59. பரமனையே பாடுவார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 59
இறைவன்: திருமூலட்டானேஸ்வரர்
இறைவி : சிவகாமியம்மை
தலமரம் : தில்லை
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சிதம்பரம்
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை முதல் நாள்
வரலாறு : இவர்கள் தொகையடியார்கள். இயல் இசை பாடிப் பரமனுக்குத் தொண்டாற்றியவர்கள்.
முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : திரு. சீனு அருணாசலம்
18/16 சின்னக் கடைத்தெரு
சிதம்பரம்
தொலைபேசி : 04144-231166

இருப்பிட வரைபடம்


புரமூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானை
உரனில்வரும் ஒருபொருளை உலகனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல் கண்ணார்ந்து நின்றானைப்
பரமனையே பாடுவார் தம்பெருமை பாடுவாம்.

- பெ.பு. 4160
பாடல் கேளுங்கள்
 புரமூன்றும்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க